tamilnadu

திருச்சிராப்பள்ளி மற்றும் கும்பகோணம் முக்கிய செய்திகள்

மின்கம்பம் விழுந்து ஒருவர் பலி

கும்பகோணம் மே 18- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் பகுதியில் தஞ்சை -விக்கிரவாண்டி நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதில் மின்கம்பம் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்றது. இப்பணியில் மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகத்சேக் மகன் ஜவுள்சேக்(19) என்பவர் சம்பவத்தன்று ஈடுபட்டபோது எதிர்பாராதவிதமாக மின் கம்பம் அவர் விழுந்தது.இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்துகும்பகோணம் தாலுகா காவலர்கள் விசாரிக்கின்றனர். 


முதியவர் கொலை?


திருச்சிராப்பள்ளி, மே 18-திருச்சி திருவெறும்பூரை அடுத்த சோழமாதேவியைச் சேர்ந்தவர் யாக்கப்நாதன்(70), ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர்.இவர் சனிக்கிழமை காலை நவல்பட்டு ஈபி பஸ் நிறுத்தம்அருகே நவலிகுளம் முட்புதரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த நவல்பட்டு காவலர்கள் யாக்கப்நாதன் உடலை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருச்சியில் பலத்த காற்றுடன் மழை மின்கம்பம் விழுந்து வீடு சேதம்

திருச்சிராப்பள்ளி, மே 18-திருச்சி கல்லுக்குழி ரயில்வே பாலம் இறக்கத்தில் முடுக்குப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சனிக்கிழமை மாலை பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பழுதடைந்த மின் கம்பம் ஒன்று கட்டப்பா என்ற கூலித்தொழிலாளின் வீட்டின் முன்பகுதியில் விழுந்தது. முன்னதாக அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.பல வருடங்களுக்கு முன் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டன. இவை எல்லாம் சேதமடைந்து விழும் நிலையில்உள்ளது. இதனால் இப்பகுதி மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. அப்பகுதியில் கடந்த ஒருவருடத்திற்கு முன் பாலா(30) என்பவர் மீது மின்கம்பம் விழுந்ததில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.