ரயில்வே கேட் கீப்பர் நியமிக்க கோரி உண்ணாவிரதம்
தஞ்சாவூர், ஜூலை 9- பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் தலைவர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் லெட்சுமி காந்தன் முன்னிலை வகித்தார். செயலாளர் விவேகா னந்தன் வரவேற்றார். மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் கலியபெருமாள், நிர்வாகிகள் செபஸ்தி, திரேஷ்குமார், நஜ்முதீன், ஸ்ரீதர், அசோக்குமார், சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக துணைச் செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார். கூட்டத்தில், “காரைக்குடி- திருவாரூர் இடையே உள்ள ரயில்வே கேட்டுகளுக்கு நிரந்தர கேட் கீப்பர்களை உடனடி யாக நியமிக்க வேண்டும். மேலும் ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட அலுவலர்களை பணியமர்த்த வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் மாதம் பட்டுக் கோட்டையில் தெருமுனை கூட்டம், அடையாள உண்ணா விரதம் நடத்துவது’ எனத் தீர்மானிக்கப்பட்டது.
திருவையாறு பகுதியில் அவ்வப்போது மின்தடை
தஞ்சாவூர், ஜூலை 9- திருவையாறு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 8-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை உயர் அழுத்த பாதைகளில் மின் கம்பிகள் தரம் உயர்த்தும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால் திருவையாறு, தில்லைஸ்தானம், ராயம்பேட்டை, காருகுடி, திங்களூர், திருப்பழனம், ஸ்ரீராம் நகர், பொன்னாவரை, கல்யாணபுரம், முகமது பந்தர், நடுக்கடை, கண்டியூர், கீழத்திருப்பூந்து ருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில், நடுக் காவேரி, காட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அவ் வப்போது மின்தடை ஏற்படும். இதற்கு பொதுமக்கள் ஒத்து ழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நிர்வாகிகள் தேர்வு
மன்னார்குடி, ஜூலை 9- திருவாரூர் மாவட்டத்தில் தனியார் பேருந்து உரிமை யாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் தலைவராக குணசேகரன், துணைத் தலைவராக அர விந்தன், செயலாளராக சரவணமுத்து, துணைச் செயலாள ராக ராஜேந்திரன், பொருளாளராக ஆதிமூலம் உள்ளிட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் திருவாரூரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மாநில பொருளாளர் சிதம்பரம், புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பி னர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
ஹஜ் பயணிகளுக்கு வழியனுப்பு விழா
திருச்சிராப்பள்ளி, ஜூலை 9- திருச்சி மாவட்டத்தில் இருந்து அரசு நிதி உதவியுடன் 170 முஸ்லீம்கள் வரும் 31-ம் தேதி ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இவர்களில் ஆண்கள் 87, பெண்கள் 83 பேர் ஆவர். இதனையொட்டி அவர்களுக்கு முஸ்லிம் இலக்கிய மன்றம் சார்பில் திருச்சி பெரிய சவுக் பள்ளிவாசலில் வழி யனுப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மன்றத்தலை வர் முகமது உஸ்மான் தலைமை தாங்கினார். செயலா ளர் கவிஞர் சையது ஜாபர் வரவேற்றார். சிறப்பு தொழு கைக்கு பின் ஹஜ் பயணிகள் பின்பற்ற வேண்டிய வழி முறைகள் பற்றி விளக்கி கூறப்பட்டது. இதில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன், மாவட்ட அரசு டவன் காஜி ஜலீல் சுல்தான், டாக்டர் அலீம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.