திருவனந்தபுரம், மே 14-நெய்யாற்றின்கரை அருகே வங்கி கடனுக்காக வீட்டைஜப்தி செய்யப்போவதாக அதிகாரிகள் மிரட்டல் விடுத்ததைத்தொடர்ந்து தீக்குளித்த மகள் உயரிழக்க, தாயார் கவலைக்கிடமாக உள்ளார்.திருவனந்தபுரம் அருகில் உள்ள நெய்யாற்றின்கரை மாராணமூட்டத்தைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி லேகா (40), மகள் கல்லூரியில் படிக்கும் வைஷ்ணவி (19).நெய்யாற்றின்கரை கனரா வங்கியிலிருந்து 15 ஆண்டுகளுக்குமுன்பு ரூ.5 லட்சம் கடன் பெற்று சந்திரன் வீடு கட்டியுள்ளார்.வட்டியுடன் ரூ.6 லட்சத்துக்கு மேல் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை செலுத்துமாறும், தவறினால் வீட்டை ஜப்தி செய்ய நேரிடும் எனவும் வங்கி அதிகாரிகள் தொடர்ந்து அச்சுறுத்தியுள்ளனர். வெள்ளியன்று காவல்துறையினருடன் வந்த வங்கி அதிகாரிகள் வீட்டை ஜப்திசெய்யவும் முயன்றுள்ளனர். அப்போது ஜப்தி செய்தால் தற்கொலை செய்து கெகாள்வதாக லேகா தெரிவிரித்துள்ளார். தகவல் அறிந்த சட்டமன்ற உறுப்பினர் ஹரீந்திரன்தலையிட்டு கால அவகாசம் அளிக்குமாறு தெரிவித்துள்ளார்.அப்போது திரும்பி சென்ற போதிலும் அதிகாரிகளின் அச்சுறுத்தல் நீடித்துள்ளது.இந்நிலையில் செவ்வாயன்று பிற்பகல் லேகாவும், மகள் வைஷ்ணவியும் தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிதீ வைத்துக்கொண்டனர். அதில் சம்பவ இடத்திலேயே வைஷ்ணவி உயிரிழந்தார். 90 சதவிகித தீ காயத்துடன் லேகாதீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த சந்திரன் வங்கி அதிகாரிகள் மாலை 4 மணிக்கு வந்து வீட்டைஜப்தி செய்வதாக தெரிவித்துள்ளனர். வீட்டில் நான் இல்லாதபோது இந்த விபரீத முடிவை எடுத்து விட்டார்கள். வீட்டைவிலைபேசி வந்தேன். ரூ.50 லட்சம் மதிப்பிலான வீட்டை ரூ.20லட்சத்துக்கு கேட்டார்கள். அப்படியும் விற்றுவிடலாம் என்கிறமுடிவுக்கு வந்தோம். சற்று கால அவகாசம் அளித்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது என்றார்.கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் கூறுகையில், வங்கிநடவடிக்கை நியாயப்படுத்த முடியாதது. அரசு தரப்பில் கடும்நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வங்கி நிவாரணம் வழங்க வேண்டும். வங்கிகளின் கூட்டம் நடத்தி இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.