tamilnadu

img

டாஸ்மாக்கை மூடக்கோரி பெண்கள் முற்றுகை

தூத்துக்குடி, ஜூன் 2-கோவில்பட்டி அருகே டாஸ்மாக்கை மூடக்கோரி பெண்கள் முற் றுகை போராட்டம் நடத்தினார்கள்.கோவில்பட்டி அருகே முடுக்கு மீண்டான்பட்டியில் இருந்து தோணுகால் செல்லும் சாலையில் வெள்ளியன்று மாலை புதிதாக அரசு டாஸ்மாக் மதுபானக்கடை திறக்கப்பட்டது. இதையறிந்த கிராம மக்கள் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் முருகன் தலைமையில் அங்கு திரண்டனர். இதை பார்த்த அரசு டாஸ்மாக் மதுபானக்கடை ஊழியர்கள் உடனடியாக கடையை மூடிவிட்டு சென்றார்களாம். இதையடுத்து கிராமமக்கள் கடையை முற்றுகையிட்டு, டாஸ்மாக் கடைதிறக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். தகவல் அறிந்து அங்கு கோவில்பட்டி டி.எஸ்.பி.ஜெ பராஜ், காவல் ஆய்வாளர்கள் அய்யப்பன், முத்துலட்சுமி தலைமையில் போலீஸார் அங்கு வந்தனர். அவர்கள் கிராமமக்களை கலைந்து செல்லும்படி கூறினர்.அப்போது, படர்ந்தபுளி, தோணுகால் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் இந்த வழியாக தான் தினமும் சென்றுவருகின்றனர். இப்பகுதியில் அரசுடாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டால் மாணவ, மாணவிகளுக்கும், பெண்களுக்கும் மதுக்குடிப்பவர் களால் அச்சுறுத்தல் ஏற்படும். இரவுநேரங்களில் இந்த சாலையில் பெண் களுக்கு பாதுகாப்பு இருக்காது என தெரிவித்தனர். இதையடுத்து, இங்குள்ள கடைமூடப்படும் என போலீஸார் தெரிவித்தனர். ஆனால், கடையில் உள்ள மதுபாட்டில்களை அப்புறப்படுத்தினால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என கிராம மக்கள் கூறினர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின்னர்டாஸ்மாக் ஊழியர்கள் சுமை ஆட்டோ கொண்டு வந்து, மதுபாட்டில்களை அங்கிருந்து எடுத்துச்சென்றனர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்துசென்றனர்.இதற்கிடையே, தூத்துக்குடி எம்பி., கனிமொழி மாவட்ட ஆட்சியருக்கு ஈமெயில் அனுப்பி உள்ளார். அதில், முடுக்குமீண்டான்பட்டி - தோணுகால் இணைப்பு சாலையில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது. முடுக்குமீண்டான்பட்டி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பயன்படுத்தும் வழியில் அமைக்கப்பட்டுள்ளஇந்த டாஸ்மாக் கடை மாணவர்களுக் கும், பொதுமக்களுக்கும் இடையூறாகஇருப்பதால், கிராம மக்கள் எதிர்ப்புதெரிவித்துள்ளனர். எனவே, மதுபானக் கடையை அந்த இடத்தில் இருந்து நீக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.