திருச்சிராப்பள்ளி, செப்.5- திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தி மக்களுக்கு தரமான மருந்துவ சேவை வழங்கிடக் கோரி பொன்மலை தியாகிகள் தினத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. துறையூர் அரசு மருத்துவமனை யை மாவட்ட மருத்துவமனைக்கு ஈடாக தரம் உயர்த்த வேண்டும். தேவையான கூடுதல் மருத்து வர்கள் மற்றும் செவிலியர்கள், ஊழி யர்கள் நியமனம் செய்ய வேண்டும். இரவு நேரங்களில் மருந்துவர் இருப் பதை உறுதி படுத்த வேண்டும், மின் விளக்கு, குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி வாலிபர் சங்கத்தின் திருச்சி புறநகர் மாவட்டக்குழு சார்பில் வியாழனன்று துறையூர் அரசு மருத்துவமனை எதிரில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பாக்யராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்டக்குழு உறுப்பி னர் ஆனந்தன், மாநில துணை செய லாளர் லெனின், மாதர் சங்க புற நகர் மாவட்ட தலைவர் லிங்கராணி ஆகியோர் பேசினர். மோகன், சர வணன், கவி, விஜய், அசோக், சக்தி வேல், முரளி உள்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். மணப்பாறை வட்டம் புத்தாநத் தம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட துணை தலைவர் அய்யாவு தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட துணை செயலாளர் கண் ணன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர் பாலு, வட்ட தலைவர் இளையராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் சங்கர், வட்ட துணை செயலாளர் வேலுச் சாமி, முன்னாள் மாவட்டகுழு உறுப்பினர் சித்திக் ஆகியோர் பேசினர். மாநில துணை செயலா ளர் பாலசந்திரபோஸ் நிறைவுரை யாற்றினார். இளையராஜா, முரு கேசன், மாசிலாமணி, நித்தியானந் தம், கலைவாணன், செவ்வந்தி உள் பட பலர் கலந்து கொண்டனர். லால்குடி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றிய செயலாளர் திலக் பிரபு தலைமை வகித்தார், முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் ஜெக தீசன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். கட்டுமான சங்க ஆண் டனி, கரும்பு விவசாயிகள் சங்க மணிகண்டன், மாதர் சங்க ஒன்றிய தலைவர் விசாலாட்சி, ஒன்றிய பொருளாளர் முருகானந்தம், டிஒய்எப்ஐ மாநிலக்குழு உறுப்பி னர் அருளரசன் ஆகியோர் பேசினர். மாநில பொருளாளர் தீபா நிறை வுரையாற்றினார். மண்ணச்சநல்லூர், எதுமலை பிரிவு ரோட்டில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் முத்துவேல் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டக்குழு உறுப்பி னர் ரவிசந்திரன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். ஒன்றியகுழு உறுப்பினர் பிரகாஷ், ஒன்றிய துணை தலைவர் மயில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றிய செய லாளர் முருகேசன், சிஐடியு அருணா சலம், மாவட்டக்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட பொருளா ளர் ஆனைமுத்து, மாவட்ட செய லாளர் நாகராஜ் ஆகியோர் பேசி னர். மாநிலக்குழு உறுப்பினர் துரை. நாராயணன் நிறைவுரையாற்றி னார்.