அன்னூர், பிப். 3- அன்னூர் அருகே பொன்னே கவுண்டன் புதூரில் வாலிபர் சங்கத்தின் சார்பில் மக்கள் ஒற்றுமை விழா உற்சாக மாக கொண்டாடப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் அன் னூர் அருகே பொன்னே கவுண்டன் புதூரில் 8ஆம் ஆண்டு மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா கடந்த சனி, ஞாயிறு ஆகிய இருதினங்கள் நடைபெற்றன. முதல்நாளான சனிக் கிழமையன்று சமத்துவ பொங்கல், விளையாட்டுப் போட்டி கள், அவிநாசி அதிர்வுகள் கலைக்குழுவின் தப்பாட்ட கலை நிகழ்ச்சி மற்றும் குழந்தைகள் நாட்டிய நிகழ்வு உள்ளிட் டவைகள் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து இரண்டாவது நாளாக ஞாயி றன்று கிராமிய பாரம்பரியப்படி முளைப்பாரி ஊர்வலம், சேலம் துர்கா பல்சுவை நிகழ்வு, கலைமாமணி விருது பெற்ற மதுரை கோவிந்தராஜனின் மர்க்காலாயாட்டம், மருதம் கலைக்குழுவினரின் ஒயிலாட்டம், தப்பாட்டம், சிலம்பாட் டம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது. இதையடுத்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மேலும், இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் பாலச்சந் தர் போஸ், கோவை மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனக ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா ளர் முகமது முசிர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் மணிகண்டன், சிஐடியு சங்க நிர்வாகி கபீர், வாலிபர் சங்கத்தின் பொன்னேகவுண்டன் புதூர் கிளை நிர்வாகிகள் மகேந்திரன், முருகேஷ், பிர தீப் மற்றும் சரவணன், அர்ஜுன் உள்பட பலர் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி னர்.