திருச்சிராப்பள்ளி, டிச.19- மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்க ளின் தமிழ்நாடு ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஓய்வூதியர் உரிமை நாள் சிறப்பு கருத்தரங்கம் புதனன்று திருச்சி யில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு ஓய் வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப் புக்குழு மாவட்டத் தலைவர் சிராஜூதீன் தலைமை வகித்தார். 1983 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஓய்வூதியம் என்பது கருணைத் தொகை அல்ல. அது சமூக ரீதியான சட்டரீதியானதொரு உறுதிப்பாடாகும். இது வேலை அளித் தவருடைய விருப்பத்தை பொறுத்து காரியத்தைப் பொறுத்து வழங்கக் கூடியது அல்ல, மாறாக கடந்த காலத்தில் ஆற்றிய பணிக்காக ஊதிய மாகவும் ஒரு சமூக நல திட்டம் ஆகும். சமூக பொருளாதார நீதியை உழைப்பா ளிக்கு அவருடைய வயது முதிர்வு காலத்தில் வழங்கக் கூடியதாக அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தலைவர்கள் கருத்தரங்கில் உரை யாற்றினர். ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவின் மாவட்ட செயலாளர் ஆதி குருசாமி, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் சுந்தர மூர்த்தி, குருநாதன், சுந்தர்ராஜன், துளசிராமன், மாவட்டச் செயலாளர் மதிவாணன், தமிழ்நாடு போக்கு வரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில துணை பொதுச்செய லாளர் சண்முகம், ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க மாநில பொதுக்குழு உறுப்பினர் அரங்கசாமி, மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு ஓய்வு பெற்ற மின் ஊழியர் நல அமைப்பு மாநில செயலாளர் கணேசன், மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அனைத்திந்திய அஞ்சல் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் சிவசுப்பிரமணி யன் ஆகியோர் கருத்துரை வழங்கி னர். முன்னதாக தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் செந்தமிழ் செல்வன் வரவேற்றார். போக்கு வரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்ட பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார்.