tamilnadu

img

முக்கிய நபர் பெங்களூரு நீதிமன்றத்தில் சரண்

திருச்சி
திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளையில் மூளையாக செயல்பட்ட திருவாரூர் முருகன் என்பவர் பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2 ஆம் தேதியன்று  13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 7 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.  இதில் சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட திருவாரூர்முருகனை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில் வெள்ளியன்று பெங்களூரு நீதிமன்றத்தில் திருவாரூர் முருகன் சரண் அடைந்தான்.

;