tamilnadu

img

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரம் 

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை சுஜித் வின்சென், வெள்ளிக்கிழமை மாலை 5.40 மணியளவில் அருகிலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புகுழுவினர்  17 மணி நேரங்களுக்கும் மேலாக குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா். குழந்தை விழுந்த சமயத்தில் 26 அடி ஆழத்தில் சிக்கியிருந்தது. ஆனால் மீட்புப் பணி தொய்வினால் குழந்தை தற்போது சுமார் 80அடி ஆழத்தில் சிக்கியிருப்பதாகத்  தகவல் வெளியாகி உள்ளது. 
இந்நிலையில் நடுக்காட்டு பட்டியில் மழை பெய்து வருவாதல் சாமியானா அமைத்து குழந்தையை மீட்கும் பணியில் மீட்புக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, கண்காணிப்பு கேமரா மூலம் குழந்தையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் மீட்புப்பணி நடைபெற்று வருகிறது என கூறினார்.

அவர் தொடர்ந்து, 70, 80 அடியில் இருந்தாலும் குழந்தை மூச்சுவிடும் சத்தம் கேட்டது.  ஆனால், காலை 5.30 மணிக்கு பிறகு, குழந்தை மூச்சுவிடுவதை கண்டறிய முடியவில்லை. உடல் நிலையையும் கணிக்க முடியவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர், திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், மதுரை மணிகண்டன், டேனியல் மற்றும் அரசின் பல்வேறு துறைகள் ஒன்றிணைந்து தற்போது வரை குழந்தையை மீட்க போராடி வருகின்றன என்று அவர் கூறியுள்ளார்.


 

;