tamilnadu

img

தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது

திருச்சிராப்பள்ளி, டிச.27- திருச்சி மாவட்டம் உப்பிலிய புரம் ஒன்றியம் எரகுடி 14 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தேவிகா கணேசன், எரகுடி ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுஜிதா முத்துக்குமார் ஆகியோர் போட்டி யிடுகின்றனர். பிரச்சாரத்தின் இறுதி நாளான வெள்ளியன்று கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலம் சென்று இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்தனர். பிரச்சாரத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.பழநி சாமி, ஒன்றிய செயலாளர் டி. முத்துக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் கணேசன், ஜி.முத்துக் குமார், எரகுடி பகுதி கிளை செயலா ளர்கள் எஸ்.பாலசுப்ரமணியண், தனபால், திலகவதி, திமுக ஊராட்சி செயலாளர் அசோக் குமார், சிண்டிகேட் பெரியசாமி, தினேஷ்குமார், காங்கிரஸ் கட்சி யின் ஜெயபால், பெரியசாமி மற்றும் மதிமுக, விசிக நிர்வாகிகள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

;