tamilnadu

தரங்கம்பாடி மற்றும் மன்னார்குடி முக்கிய செய்திகள்

திருவிளையாட்டத்தில் அங்கன்வாடி மையம் திறக்க கோரிக்கை

தரங்கம்பாடி, ஜூன் 11- நாகை மாவட்டம்,செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றி யம் திருவிளையாட்டம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் (ஒருங்கிணைந்த குழந்தைகள் மையம்) திறக்க வேண்டு மென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  திருவிளையாட்டம் மெயின் ரோடு,தாமரைக்குளம்,பிடாரிக்கோயில் தெரு, சிவன்கோயில்தெரு, மேலத் தோப்புத் தெரு, ஜின்னாத்தெரு பகுதிகளில் வசிக்கும் குழந்தை கள், கர்ப்பிணி பெண்களுக்கென ஊராட்சி அலுவலகம் முன்பு இயங்கி வந்த அங்கன்வாடி மையக்கட்டிடம் மிக மோசமாக சேதமடைந்ததால் அக்கட்டிடம் மூடப்பட்டது.  தற்காலிகமாக மாற்று இடத்தில் மையத்தை செயல் படுத்துவதற்கு பதிலாக முழுமையாக மையம் மூடப்பட்ட தால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பலமுறை தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் மையம் செயல்பாட்டுக்கு வர வில்லை உடனடியாக மாற்று இடத்தில் அங்கன்வாடி மையத்தை இயக்குவதோடு, புதிதாக ஏற்கனவே இயங்கிய இடத்தில் புதிய கட்டிடம் கட்டவேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.                                     

மன்னார்குடியில் நன்றி அறிவிப்பு கூட்டம்

மன்னார்குடி, ஜூன் 11- தஞ்சை நாடாளுமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றியின் நன்றி அறிவிப்பு கூட்டம் மன்னார்குடியில் செவ்வாய்கிழமை திமுக திருவாரூர் மாவட்ட செயலாளரும் திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கே.கலைவாணன் தலை மையில் நடைபெற்றது. மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், நகர ஒன்றிய செயலாளர்கள் எல்.சண்முகவேலு, சோம. ராஜமாணிக்கம், எஸ்.ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வை.சிவபுண்ணியம், மாநில நிர்வாகக்குழு உறுப்பி னர் வை.செல்வராஜ், ஒன்றிய செயலாளர் ஆர்.வீரமணி, நகர செய லாளர் வி.கலைச்செல்வன், திமுக மாவட்ட அவைத்தலைவர் சித்த மல்லி ந.சோமசுந்தரம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே. ராமச்சந்திரன், பி.இராசமாணிக்கம், தலைமை செயற்குழு உறுப்பி னர் தலையாமங்கலம் ஜி.பாலு, விசிக.மாவட்ட செயலாளர் வி.த. செல்வம், மாநில செயற்குழு உறுப்பினர் வ.பார்வேந்தன், மாநில துணைத்தலைவர் இரா.ரமணி, திராவிடர் கழக மாவட்ட தலைவர் ஆர்.பி.சித்தார்த்தன், நகர தலைவர் ஆர்.எஸ்.அன்பழகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். நிறைவாக தஞ்சை நாடாளு மன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் நன்றி தெரிவித்து சிறப்பு ரையாற்றினார். திமுக நகர செயலாளர் வீரா.கணேசன் நன்றி கூறினார்.