தஞ்சாவூர் நவ.18- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஆ.அண்ணாதுரை விழுப் புரம் மாவட்ட ஆட்சியராக இட மாற்றம் செய்யப்பட்டார். சென்னை பெருநகர இணை ஆணையர் பொறுப்பில் இருந்த எம்.கோவிந்த ராவ் தற்போது தஞ்சை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கும்பகோணம் சார் ஆட்சியராக பணியாற்றியுள்்ளார். இந்நிலையில் திங்கள்கிழமையன்று எம்.கோ விந்தராவ் தஞ்சை ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பல்வேறு அரசுத்துறை அலு வலர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.