tamilnadu

img

இளம்பெண் கொலை வழக்கு காவல்துறை மெத்தனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 திருச்சிராப்பள்ளி, ஆக,6- வனப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள், சோதனை சாவடிகள் அமைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித உரிமை பாதுகாப்புகுழு மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க திருச்சி புறநகர் மாவட்டக்குழு சார்பில் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் திங்களன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க புறநகர் மாவட்ட செயலாளர் மல்லிகா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மனித உரிமை பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், மாவட்ட தலைவர் ரஜினிகாந்த் ஆகியோர் பேசினர். ஒன்றிய செய லாளர்கள் மண்ணச்சநல்லூர் கிழக்கு கனகராஜ், மண்ணச்ச நல்லூர் மேற்கு ரவிச்சந்திரன், லால்குடி ஜெகதீன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.