தஞ்சாவூர், ஜூன் 11- தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுகாவில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனையாளராகப் பணிபுரிந்த எஸ்.ரஜினிகாந்த் கடந்த மே.13 அன்று திங்களூ ரில் காலமானார். மேலும், தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றங்கரை டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனையாளராகப் பணிபுரிந்த வி.கிருஷ்ணமூர்த்தி செங்கமேட்டில் மே.21 அன்று காலமானார். மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம், சிஐடியு நிர்வாகிகள், நிர்வா கக்குழு உறுப்பினர்கள் மூலம் நிதி வசூலிக்கப்பட்டு இரு வரது குடும்பத்துக்கும் தலா ரூ10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.20 ஆயிரம் நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் க.வீரையன், மாவட்டத் தலைவர் ஜெ.ரமேஷ், பொரு ளாளர் க.மதியழகன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஆறு முகம், நிர்வாகிகள் எம்.சரவணன், வி.ஜி.கருணாநிதி, ஏ.ஜி.பன்னீர்செல்வம், நெடுஞ்செழியன், சிவகுமார், ஜெய பிரகாஷ், ஜெகதீசன், கோவிந்தராஜ், பாலாஜி, சச்சிதா னந்தம் ஆகியோர் மரணமடைந்த எஸ்.ரஜினிகாந்த், வி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது இல்லங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கப்பட்டது.