திருச்சிராப்பள்ளி, ஜூலை 9- ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட உத்தமர்சீலி ஊராட்சியில் நத்தம் காலிமனையில் நீண்ட நாட்களாக குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும். தனிநபர் கழிவறை கட்டித்தர வேண்டும். வீடுகளுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவ சாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் உத்தமர்சீலி ஊராட்சி அலுவலக முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து உத்தமர்சீலி ஊராட்சி அலுவலகத்தில் ஸ்ரீரங்கம் மண்டல துணை வட்டாட்சியர் சுரேஷ் தலைமை யில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உரிய விசாரணை செய்து தகுதி அடிப்படையில பட்டா வழங்கப்ப டும். கழிவறை, குடிநீர் இணைப்பு ஆகியவை செய்து தர நட வடிக்கை எடுக்கப்படும் என்று துணை வட்டார வளர்ச்சி அலு வலர் உறுதியளித்ததன் பேரில் முற்றுகை போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் அஇவிதொச மாநிலச் செயலாளர் அ.பழநிசாமி, மாவட்ட தலைவர் ஏ.செல்வராஜ், மாவட்டச் செய லாளர் என்.தங்கதுரை, மாவட்ட பொருளாளர் எஸ்.இளங்கோ வன், மாவட்டக்குழு உறுப்பினர் பழனிவேல், உலகநாதன், கொள்ளிடம் காவல் உதவி ஆய்வாளர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.