tamilnadu

img

கரூரில் ஏரி, குளக் கரைகள் பலப்படுத்தும் பணி ஆய்வு

கரூர், செப்.20-  கரூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வாய்க்கால், கண்மாய், குளம் என நீர் வழித்தடங்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. குளித்தலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில்  மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆட்சியர் த.அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மயிலாடியில் கட்டளை மேட்டு வாய்க்கால் மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஏரி, குளக் கரைகளை பலப்படுத்தும் பணிகளை பார்வையிட்டார். மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் 67 சிறு பாசனக் குளங்கள் ரூ.335 லட்சம் மதிப்பிலும், 367 குளங்கள் ரூ.367 லட்சம் மதிப்பிலும் தூர்வாரப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான குளங்கள் முழுவதும் நீர் நிரம்பும் சூழல் உருவாகும். இதன் மூலம் அப்பகுதியின் நிலத்தடி நீர் செறிவூட்டம்  பெறுவதோடு, விவாசயப்பெருங்குடி மக்களின் தேவைக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என ஆட்சியர் தெரிவித்தார்.