tamilnadu

img

நவம்பர் புரட்சி தினத்தில் மரக்கன்றுகள் நட்ட மாணவர்கள்

திருவாரூர், நவ.8- 102-வது நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் இந்திய  மாணவர் சங்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.  திருவாரூர் ஒன்றியத்தில் விளமல் மற்றும் அடியக்கமங்கலம் ஆகிய ஊர்களில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மரக்கன்று கள் நடப்பட்டன. விளமல் அரசு உயர்நிலைப்ப ள்ளியில் தலைமை ஆசிரியர் ஹரிஹரன் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது. அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முருகபூபதி முன்னிலை யிலும், நன்னிலம் பாரதிதாசன் உறுப்பு கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியர்களின் முன்னிலையும் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஹரி சுர்ஜித், துணைச் செயலாளர் வீ.சந்தோஷ், ஜெயசீலன் மற்றும் ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர். 

;