tamilnadu

img

குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க கோரி போராட்டம்

புதுக்கோட்டை, ஜூலை 2- குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்ப்ப தற்கு போர்க்கால அடிப்படையில் நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசா யத் தொழிலாளர்கள் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனுக் கொடுத்து செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற போராட்டத் திற்கு ஒன்றியச் செயலாளர் ஆ. செந்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஏ. பாலசுப்பிரமணியன் தொடக்கவுரை யாற்றினார். போராட்டத்தை நிறைவு செய்து மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர் சிறப்புரையாற்றினார்.  கோரிக்கைகளை விளக்கி சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.உடையப்பன், சிஐடியு அனைத்துப் போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டப் பொதுச் செயலாளர் க. சிவக்குமார், சிபிஎம் ஒன்றியச் செய லாளர் எல்.வடிவேல், ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.சுசீலா, சிஐடியு அனைத்துப் பொதுக்குவரத்து சங்க ஒன்றியச் செயலாளர் ஏ.ஆர்.பாலசுப்பிரமணியன், மாதர் சங்க ஒன்றி யச் செயலாளர் கே.நாடியம்மை பேசி னர். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் சுழற்சி முறை இல்லாமல் தினமும் வேலை வழங்க வேண்டும். சட்டக்கூலி ரூ. 229-ஐ முழுமையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத் தில் வலியுறுத்தப்பட்டன.

நன்னிலம்

இதே போல் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவல கம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய தலை வர் சங்கர் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் வீரபாண்டியன், நகர செய லாளர் நடராஜன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் ராமமூர்த்தி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.  அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்க ஒன்றிய செயலாளர் லிங்கம், மாவட்ட செயலாளர் குமாரராஜா, மாநி லக்குழு மாரியம்மாள், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தியாகு ரஜினி காந்த் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் நாளில் 100 நாள் வேலைத் தொழிலா ளர்களுக்கான விடுப்புடன் கூடிய ஊதி யத்தை வேலை அட்டை பெற்றுள்ள அனைத்துத் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கவும், சட்ட கூலி ரூபாய் 229-ஐ வழங்கிடக் கோரி யும் உள்ளிட்டவை வலியுறுத்தப்பட் டது. இதில் 100-க்கும் மேற்பட்ட விவ சாயத் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.