tamilnadu

img

பழுதடைந்த மின் கம்பங்களுக்கு அஞ்சலி செலுத்தும் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 4- திருச்சி உறையூர் பாண்டமங்கலம் மற்றும் செட்டித்தெரு பகுதிகளில் 1 வருடமாக பழுந்தடைந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்றக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை மாற்றப்பட வில்லை. எனவே பழுதடைந்த மின்கம் பங்களை மாற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகு திக்குழு சார்பில் பழுதடைந்த மின்கம் பங்களுக்கு அஞ்சலி செலுத்தும் போராட்டம் வியாழனன்று செட்டித் தெரு பகுதியில் நடைபெற்றது. போராட்டத்திற்கு கிளை செயலா ளர்கள் மௌலானா, ராமசாமி ஆகி யோர் தலைமை வகித்தனர். மேற்கு பகுதி செயலாளர் கோவி.வெற்றிச் செல்வன், மாவட்டக்குழு உறுப்பினர் சுப்ரமணியன், பகுதிக்குழு உறுப்பி னர்கள் நடராஜன், வடிவேல், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநகர் மாவட்ட தலைவர் சந்திரபிரகாஷ் உள் பட பலர் கலந்து கொண்டனர். தகவல றிந்து வந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் போராட் டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மின்கம்பங்களை உடனடியாக மாற்றி அமைத்தனர்.