tamilnadu

ஸ்ரீராம் சிட்டி பைனான்ஸ் நிறுவனத்தை கண்டித்து போராட்டம்

 திருச்சிராப்பள்ளி, அக்15- தமிழகம் முழுவதும் ஸ்ரீராம் சிட் என தொடங்கி இன்று ஸ்ரீராம் சிட்டி பைனான்ஸ் என்கிற பெயர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை உருவாக்கி செயல்பட்டு வரு கிறது ஸ்ரீராம் குரூப் நிறுவனங்கள். இந்நிறுவனத்தில் டிராக்டர், பவர்டில்லர், குட்டி யானை, ஷாப்பிங் மால்கள் போன்றவற்றிற்கு கடன் வழங்கப்படுகிறது. கடன் பெறும் போதே அவர்கள் நிறுவனத்தை சேர்ந்தவர்களே 5 சதவீதம் கமிஷன் பெறுவது. கடன் பெற்றவர்கள் ஒரு சில தவணைகள் கட்ட முடியாமல் போனால் ஸ்ரீராம் நிறுவனத்தில் பணிபுரி யும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள், அடியாட்களு டன் வீட்டிற்கு வந்து உயர்நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு எதிராக ஜப்தி நடவடிக்கையில் ஈடுபடுவது.  கடனில் வாங்கும் வாகனத்திற்கு ஸ்ரீராம் இன்சூரன்ஸ் நிறுவனத்திலேயே பாலிசி எடுப்பதை கட்டாயமாக்கி விபத்தில் கடன் பெற்றவர் இறந்து விட்டால் அவரது குடும்பத்திற்கு சேர வேண்டிய இன்சூரன்ஸ் தொகையை சட்ட விரோதமாக வரவு வைத்து கொள்வது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளால் விவசாயிகள், தொழி லாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உள்ளது. இதனை கண்டித்தும் கடன் தொகை செலுத்திய உடனேயே அசல் பத்திரங்களை உடனே வழங்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாய் அன்று திருச்சி தில்லை நகர் 11 வது கிராசில் உள்ள ஸ்ரீராம் சிட்டி பைனான்ஸ் நிறுவனம் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், வி.ச.வையம்பட்டி ஒன்றிய செயலா ளர் வெள்ளைச்சாமி, சிஐடியு காட்டூர் பொறுப்பாளர் நல்லையா, மணப்பாறை சமுத்திரம் சிபிஎம் கிளைசெய லாளர் மாசிலாமணி ஆகியோர் பேசினர். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். இதனையடுத்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கடன் தொகையை செலுத்தியவர்களுக்கு 1 வார காலத்திற்குள் அசல் பத்திரங்களை ஒப்படைப் பது என முடிவானது. இதையடுத்து போராட்டம் கைவிடப் பட்டது. போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 300 பேர் கலந்து கொண்டனர்.