தஞ்சாவூர் செப்.20- தஞ்சாவூர் வைரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை ஆட்சியர் ஆ.அண்ணாதுரை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக குழு உறுப்பினர் கே.ஜெ.லெனின், மண்டல மேலாளர் சு.மாணிக்கம் கலந்து கொண்டனர். விற்பனை நிலைய மேலாளர் பி.புகழேந்தி நன்றி கூறினார். தீபாவளி பண்டிகையை யொட்டி 30 சதவீத தள்ளுபடி விற்பனை உள்ளது. மேலும் கனவு நனவு திட்டம் என்ற சிறப்பு சேமிப்பு திட்டம் மூலம் 11 மாத சந்தா தொகையை வாடிக்கையாளர்களிடம் பெற்று 12 ஆவது மாத சந்தா தொகையை கோ-ஆப் டெக்ஸ் நிறுவனமே செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் வழங்கி வருகிறது. கடந்தாண்டு தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள 16 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் ரூ 1134 லட்சம் விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டு ஆயிரத்தி முந்நூறு லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருச்சி
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கோ-ஆப்டெக்சில் தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனையை ஆட்சியர் சிவராசு தலைமை தாங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். கோ ஆப் டெக்ஸ் நிர்வாகக்குழு உறுப்பினர் ஜவகர், துணை மண்டல மேலாளர் அன்பழகன் கலந்து கொண்டனர். முன்னதாக மேலாளர் சீனிவாசன் வரவேற்றார். கிளை மேலாளர் ஆனந்த முருகன் நன்றி கூறினார். கடந்தாண்டு தீபாவளிக்கு திருச்சி பொதிகை விற்பனை நிலையத்தில் ரூ2.30 கோடி விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டு தீபாவளிக்கு ரூ 2.96 கோடி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.