கரூர், அக்.18- தென்னிந்திய அளவிலான சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான ஜூடோ விளை யாட்டு போட்டி தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் நடைபெற்றது. தென் மாநிலங்களை உள்ளடக்கிய சிபிஎஸ்இ பள்ளிகளிலிருந்து சுமார் 400 வீரர், விராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி யைச் சேர்ந்த லித்திக் வர்ஷன், அரவிந்த், ஜனநாதன், சஞ்சித், பூபதி ராஜா, மேகஷ்யாம், ஆதித்யன், துரை அஜய், பூவிழி, யுவஸ்ரீ, சஹானா, ராஜேஸ்வரி, சந்தியா, கமலி, நவீனா, விவேகா, பிரியதர்ஷினி, ஆத்திகா, நித்யஸ்ரீ, வானதி ஆகியோர் தங்கப் பதக்கத் தையும், கிருஷ்ணா, பிரிதிவிராஜா, விகாஷ், லக்ஷன் ராகவேந்திரா, நிதர்ஷன், சுகாஷ், கௌஷிக், மோகன வர்ஷிகா, சுசிதா, தீட்ஷிதா, சதுர்விதா, அக்சயா, மஹிந்தா, ராஜகுமாரி, திரிஷா ஆகியோர் வெள்ளிப்பதக்கத்தையும், கபிலன், ஸ்ரிதிகன், கார்த்திக்மணி, தருண் கமார், ஜீவிதாஸ்ரீ, திவ்யா ஆகியோர் வெண்க லப் பதக்கத்தையும் வென்றுள்ளனர். போட்டியில் பரணி வித்யாலயா பள்ளி யைச் சேர்ந்த 46 மாணவர்கள் பங்கு பெற்று 41 பேர் பதக்கங்களை வென்றனர்.
மொத்த மாக 20 தங்கப் பதக்கத்தையும், 15 வெள்ளிப் பதக்கத்தையும், 6 வெண்கல பதக்கத்தையும் வென்று ஆண்கள், பெண்கள் இரண்டு பிரி விலும் சாம்பியன் பட்டம் வென்றனர். இதன் மூலம் புள்ளிகளின் அடிப்படையில் ஒன்பதா வது முறையாக ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளனர். தொடர்ந்து ஒன்பதாவது முறையாக தென்னிந்திய ஜூடோ போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று தமிழ கத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்த ஜூடோ வீரர், விராங்கனைகள் மற்றும் அவர்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்கள் துரை, முத்து லட்சுமி ஆகியோருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பரணி பார்க் கல்வி குழும தாளாளர் மோகனரெங்கன் தலைமை தாங்கி னார். செயலர் பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தார். கரூர் ஆட்சியர் அன்பழகன் ஜூடோ வீரர், விராங்கனைகளை பாராட்டி வாழ்த்தினார். தமிழ்நாடு ஜுடோ சங்க மாநில துணை தலைவரும், பரணி பார்க் கல்வி குழும முதன்மை முதல்வருமான முனைவர் சொ.ராமசுப்பிரமணியன், பரணி வித்யாலயா பள்ளி முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் பிரியா மற்றும் இருபால் ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டி வாழ்த்தினர்.