tamilnadu

வீட்டை அபகரித்துக் கொண்டு துரத்திய மகன்

தஞ்சாவூர், ஜூலை 1-  தஞ்சாவூர் ஆட்சியர் அலுவல கத்தில் திங்கள்கிழமை மக்கள் குறை தீர் கூட்டம் ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடந்தது. இதில் பொது மக்களிடம் கோரிக்கை மனுவை ஆட்சி யர் பெற்றுக் கொண்டிருந்த போது மூதாட்டி ஒருவர் தனது பையில் வைத்தி ருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீக் குளிக்க முயன்றதால் ஆட்சியர் திகைத் துப் போனார்.  இதையடுத்து அங்கிருந்த காவ லர்கள் அந்த மூதாட்டியை மீட்டனர். இருப்பினும் உடலில் எரிச்சல் தாங்க முடியாமல் அவர் கதறி அழுதார். பின் னர் மீண்டும் அங்கிருந்த வளாகத்தில் உள்ள தண்ணீர் குழாயில் அரை மணி நேரம் கண்ணீர் வடித்தபடி உடலை நனைத்துக் கொண்டார். பின்னர் அவ ரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் கிராமத்தைச் சேர்ந்த மங்கலமேரி(62) என்பதும், இவரது கணவர் தங்க சேவியர் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார் என்பதும் தெரிய வந்தது. இவர்களுக்கு நெப்போலியன், அருள்தாஸ், இன்ப ராசு என்ற 3 மகன்கள் உள்ளனர். இதில் இன்பராசு, தந்தை தங்க சேவியரின் 10 செண்ட் நிலம், வீடு ஆகியவற்றை மங்கலமேரிக்குத் தெரியாமல் அப ரித்துக் கொண்டு அவரை வீட்டை விட்டு அடித்து துரத்தி விட்டார். இது தொடர் பாக 2 முறை ஆட்சியர் அலுவல கத்தில் மனுக் கொடுத்தும் எந்த நட வடிக்கை இல்லாத நிலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார் என தெரியவந்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட மங்கல மேரி கூறுகையில், என்னை ஏமாற்றி அபகரித்துக் கொண்ட நிலங்களை மீட்டு தர வேண்டும். இருக்க வீடு உள்ளிட்ட உடமைகள் இன்றி நிர்க்கதி யாய் தவித்து வருகிறேன்’ என கண்ணீர் வடித்தார்.