பொது இடங்களில் புகை பிடித்த 10 பேருக்கு அபராதம்
சீர்காழி, ஜூன் 17- நாகை மாவட்டம் கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் பபிதா தலைமையில் சுகாதார மேற்பார்வை யாளர் சந்தானராஜ், சுகாதார ஆய்வாளர்கள் கருணா கரன், சதீஷ்குமார், அன்புராஜ் ராமச்சந்திரன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், தைக்கால், புத்தூர் ஆகிய பகுதி யில் பொது இடங்களில் புகை பிடித்த 10 பேருக்கு அப ராதம் விதித்தனர். மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 7 கடை உரிமையாளர்களுக்கு அப ராதம் விதித்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த னர். 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட் களை விற்பனை இல்லை என்ற வாசகங்கள் அடங்கிய விளம்பர பலகையை கடை முன்பு கட்டாயம் வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
வெளிச்சம் மாதக் கூட்டம்
திருச்சிராப்பள்ளி, ஜூன் 17- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கைலாசபுரம் கிளை சார்பில் வெளிச்சம் மாதக்கூட்டம் ஞாயிறு அன்று பெல் சிஐடியு அலுவலகத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு கங்காதேவி தலைமை வகித்தார். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளும் நம் எதிர்கால பணிகளும் என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் பேசினர். முன்னதாக கவிதை, பாடல், பறையிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் தமுஎகசவினர் மற்றும் தோழமை சங்கத்தி னர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக அனுஷ்யா வரவேற்றார். சித்ரமாலா நன்றி கூறினார்.