tamilnadu

img

லேப்டாப் வழங்கக் கோரி மாணவர்கள் முற்றுகை போராட்டம்

திருச்சிராப்பள்ளி, நவ.20- திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பதினோராம் வகுப்பில் 128 பேர் படித்து வருகின்றனர்.  இவர்களில் 52 மாணவர்களுக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. மீதம் உள்ள 76 மாணவர்களுக்கு இதுநாள் வரை லேப்டாப் வழங்கப்படவில்லை. இதுகுறித்து மாணவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் கேட்ட தற்கு சரியான பதில் இல்லை என்று கூறப் படுகிறது. இதனையடுத்து அனைத்து மாண வர்களுக்கும் லேப்டாப் வழங்கக்கோரி இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலா ளர் மோகன் தலைமையில் புதனன்று மாணவர்கள் பள்ளி நுழைவாயில் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் பாரத விவேகானந்தர் மாணவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத தையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் சாந்தி சம்பவ இடத்திற்கு வந்து மாண வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.   அப்போது இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மோகன் பேசினார். அதனால் கோபமடைந்த முதன்மை கல்வி அலுவலர் சாந்தி, எனது மாணவர்களிடம் பேசுவதற்கு நீ யார்? உன்னோடு என்னால் பேச முடியாது என்றும் நான் மாணவர்களி டம் மட்டுமே பேசுவேன் என்றும் கூறிவிட்டு பள்ளியின் உள்ளே சென்று விட்டார். பின்னர் காவல்துறைக்கு கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அங்கு திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் ஞானவேல் தலைமையில் போலீசார் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளை கைது செய்வதாகக் கூறி போலீசார் வாகனத்தில் ஏற்றினார்.  அப்போது மாணவர்கள் போலீசார் வாகனத்தை வழிமறித்து இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளை கைது செய்யக்கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை யடுத்து இந்திய மாணவர் சங்க நிர்வாகி களை போலீசார் விடுவித்தனர். இந்நிலையில் முதன்மை கல்வி அலு வலர் சாந்தி இன்னும் இரண்டு நாட்களில் லேப்டாப் கொடுக்க நடவடிக்கை எடுக்கப் படும் என தெரிவித்தார். இதையடுத்து மாண வர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.