tamilnadu

சிபிஎம் மூத்த தோழர் அங்கமுத்து காலமானார்

சிபிஎம் மூத்த தோழர் அங்கமுத்து காலமானார்

கரூர் மாவட்டம் ராயனூரைச் சேர்ந்தவர் எஸ். அங்கமுத்து(85). உடல் நலக் குறைவு காரணமாக ராயனூரில் உள்ள நேரு நகரில் உள்ள தனது இல்லத்தில் திங்கள்கிழமையன்று காலமானார். இவர், கைத்தறி தொழிலாளியாக பணியாற்றிய போது, கைத்தறி தொழில் மூலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு, கிட்டத்தட்ட 50 ஆண்டு காலமாக கட்சியில் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்ற அரர், பல்வேறு தோழர்களை கட்சிக்கு கொண்டு வந்தார். தனது வாழ்க்கையின் கடைசி வரை கட்சி பணியாற்றினார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு, செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.தண்டபாணி, ஆர். ஹோச்சுமின், எஸ்.பி. ஜீவானந்தம், எம். சுப்பிரமணியன், ராயனூர் கிளை உறுப்பினர்கள் எம். ராமசாமி, எஸ். கணேசன், வாழ்காட்டுப்புதூர் கிளை எஸ். ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.