62 ஆண்டுகால பாரம்பரி யம் மிக்க ஒரு ஆலை, தற்போது மெல்லமெல்ல தகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த ஆலை இயங்கியபோது அதனால் பலன டைந்து வாழ்ந்த பலரும், ஒரு சிறு பிரச்சனை என்றால் கூட கூக்குர லிட்டு கொடி பிடித்த இடதுசாரி அமைப்புகளும் பல முயற்சிகள் எடுத்தும் எந்தப் பயனும் இல்லை. தற்போது ஒன்றுமே செய்ய முடி யாமல் ஆலை இடிக்கப்பட்டு தள வாடப்பொருட்கள் லாரியில் ஏற்றப் படுவதை கலங்கிய கண்களுடன் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க முடிகிறது. இன்றைய கூத்தாநல்லூர் தாலுகா வடபாதிமங்கலம் திருஆரூ ரான் சர்க்கரை ஆலைதான் அது. இந்தப்பெயர் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் அடையாள மாகும். திருஆரூரான் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்தால் அந்த இளைஞர்க்கு கண்ணை மூடிக் கொண்டு பெண்ணை கொடுக்க லாம் என வரிசையில் நின்ற காலம் ஒன்று உண்டு. இந்த ஆலை இந்தியா சுதந்தி ரம் பெற்ற 10 ஆண்டுகளிலேயே 1957-ல் துவங்கப்பட்டது. ஏறத்தாழ 400 அலுவலகப் பணியாளர்கள், 1500 உற்பத்தி பணியாளர்கள், சுமைப்பணியாளர்கள், ஒட்டுநர்கள் என மறைமுகமாக பயன்பெறு வோர் பெரும் எண்ணிக்கையில் இருந்தனர். 10,000 ஏக்கர் நிலம் அதில் பயிரிடப்படும் கரும்பு, சராசரி 4 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி யில் இந்தியாவின் பைன் சுகர் என் கிற பெருமை பெற்ற சர்க்கரை ஆலை யாக விளங்கியது அப்போது. இந்த ஆலையில் ஒலிக்கும் சங்கொலி தான் பலருக்கு அப்போ தைய கடிகாரம். இந்தியாவின் சர்க்கரை தேவையில் கணிசமான பங்கை பூர்த்தி செய்தது மட்டு மல்லாமல் ஏற்றுமதியும் செய்ய சர்க்கரையை உற்பத்தி செய்தது இந்த ஆலை. இது வடபாதிமங்க லம் வி.எஸ்.டி.தியாகராஜ முதலி யார் என்பவரால் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கிவந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலை நிர்வாகம் திரு வாரூர் தியாகராஜ சுவாமிகோவி லுக்கு மட்டுமே 1000 வேலி நிலத்தை தானமாக கொடுத்தும் வடபாதி மங்கலம் அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு 320 வேலி நிலத்தை தானமாக கொடுத்தும் பெருமை பெற்றது. திருவாரூர் தியாகராஜர் கோவில் தேர் மற்றும் திருவிழா என அனைத்து கோயில் செலவு களையும் செய்ததோடு பாரம்பரிய அறங்காவலராகவும் இந்த சர்க் கரை ஆலையின் உரிமையாளர் இருந்த பெருமையைக் கொண்டது என்று இப்போதும் சிலர் பேசிக் கொள்வது குறிப்பிடத்தக்கது. வடபாதிமங்கலத்தை சுற்றி யுள்ள கிராமங்களில் எல்லாக் கோவில்களுக்கும் பராமரிப்பு செலவை ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகமே செய்தது. நில உச்சவரம்பு சட்டம் வந்தபோது இந்த கரும்பு பண்ணைக்கு சொந்த மான சில கிராமங்களில் உள்ள நிலங்களை நிலமற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி யது. வலுவான போராட்டத்திற்கு பின்பு ராஜாங்கட்டளை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தில் வசிக்கக்கூடிய கூலி வேலை செய்த வர்களுக்கு நிலம் கொடுக்கப்பட்டு குத்தகை விவசாயிகளாக மாற்றப் பட்டனர். அதனைத் தொடர்ந்து கரும்பு பண்ணைக்கழகமும் நஷ் டத்தில் இயங்கிய காரணத்தினால் இதற்கு மேல் அரசு கடனோ மானி யமோ கொடுக்க முடியாது என்ற இக்கட்டான நிலையில், 20 ஆண்டு காலம் சிறப்பாக இயக்கி வந்த கரும்பு பண்ணையை அரசு கலைக்க முடிவுக்கு வந்தது. 1990-ல் கலைஞர் கையாலேயே 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும் பங்களுக்கு கரும்பு பண்ணை கழ கத்தின் நிலம் பிரித்துக் கொடுக்கப் பட்டது. ஒரு காலத்தில் வடபாதி மங்களம் பண்ணையில் பண்ணை யாட்களாகவும் பண்ணை கழகத் தில் தொழிலாளிகளாகவும் இருந்த 4 ஆயிரத்திற்கும் அதிகமான குடும் பங்கள் நிலத்திற்கு சொந்தக்காரர் களாக ஆக்கப்பட்டனர். இதில் 300 ஏக்கர் நிலம் வடபாதிமங்கலத்தை சுற்றியுள்ள 18 கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது என் பது குறிப்பிடத்தக்கது. இது மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்தின் பயனே ஆகும். இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட சராசரி சர்க்கரையின் அளவு 4 லட்சம் டன் என்கிற பெரிய உச்சத்தை அடைந்ததோடு ஆலை யில் எஞ்சும் கரும்புச் சக்கையின் மூலம் தயாரிக்கப்பட்ட மின்சாரத் தின் அளவும் சாதனையைத் தொட் டது. 1957 முதல் இவ்வளவு சாதனை களைத் தொட்ட திருஆருரான் சர்க் கரை ஆலை 1997 முதல் வேறு வழி யில்லாமல் தனது உற்பத்தியை நிறுத்திக் கொண்டது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. கரும்பு உற்பத்தி குறைவு, மூலப் பொருட்களின் விலையேற்றம், தொழிலாளர்கள் பிரச்சனை, நிர்வாகப்பிரச்சனை இப்படி பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதை இனம்கண்டு நிவர்த்தி செய்ய முடியாமல் போனது பெரும் சோகம்தான். ஆலை நிர்வாகமும் இந்த ஆலையிலிருந்து ஊதப்பட்ட சங்கும் 1997 முதல் நிறுத்தப்பட்டது. நின்றுபோனது சங்கொலி மட்டு மல்ல சுற்றியுள்ள 18 கிராமங்களின் வாழ்வாதாரமும்தான். ஆயினும் இந்த ஆலையில் வேலைபார்த்த பலர் கொல்லுமாங்குடி சர்க்கரை ஆலை பணிக்கு மாற்றிவிடப்பட்ட னர். தற்போது இந்த ஆலையின் தொடர்ச்சியாக இயங்கி வந்த கொல்லுமாங்குடி சர்க்கரை ஆலை, பாபநாசம் திருமண்டகுடி சர்க்கரை ஆலை, திருவிடைமருதூர் கோட் டூர் சர்க்கரை ஆலை, விருத்தா சலம் ஏ.சித்தூர் சர்க்கரை ஆலை, பென்னாடம் திட்டக்குடி சர்க்கரை ஆலை என தொடர்ச்சியாக எல்லா ஆலைகளுமே மூடப்பட்டுவிட்டன. ஆனால் இந்த ஆலை நிர்வாகத் தால் திருவாரூரில் அன்றைக்கு நிறு வப்பட்ட வி.எஸ்.டி. பள்ளி திருவா ரூக்கே அடையாளமாக இன்றள வும் ஓங்கி வளர்ந்து கொண்டிருக்கி றது. ஆனால் இன்றைக்கு எலும் புக்கூடாக காட்சியளிக்கும் வடபாதி மங்கலம் திருஆரூரான் சர்க்கரை ஆலையில் எஞ்சிய இரும்புகளும் இதரபொருட்களும் ஏலம் விடப் பட்டு தற்போது இடித்து எடுக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. சங்கொலி கேட்ட ஆலையில் இன்று ஆலை இடிக்கப்படும் ஓசையை மட்டுமே பொது மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் என மக்களுக்கு பொருளாதாரத் தேவையை பூர்த்தி செய்ய மீண்டும் ஆலையை இயக்குவதற்கு தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். ஆரூரான் சர்க்கரை ஆலையின் நிறுவனரின் வாரிசுகளும் அர சோடு பேச்சுவார்த்தை நடத்தி இந்த ஆலையை நவீனமயமாக அதே இடத்தில் நிறுவுவதற்கு முன்வர வேண்டும் என்பது இந்தபகுதி மக்க ளின் எதிர்ப்பார்ப்பும் கோரிக்கை யாகவும் உள்ளது.