திருச்சிராப்பள்ளி, ஆக.22- திருச்சி மாவட்டத்தில் 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் பல தலை முறையாக இத்தொழிலை செய்து வருகின்றனர். இந்நிலையில் மணல் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அரசு அனுமதி மறுத்தது. இதையடுத்து பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்றன. அதையொட்டி பொதுப்பணித் துறை அலுவலகத்தில் கடந்த பிப்ர வரி மாதம் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. அதில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் திருச்சி மாவட்டத்தில் கீழமுல்லக்குடி, கீழகொண்டை யம்பேட்டை, அப்பாத்துரை, லால் குடி, அரியூர் ஆகிய இடங்களில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மணல் மாட்டு ரீச் திறக்கப்படும் என முடி வானது. ஆனால் கடந்த ஜூன் மாதம் 10-ம் தேதி கீழமுல்லக்குடியில் மட்டும் ரீச் திறக்கப்பட்டது. பின்னர் காவிரி ஆற்றில் தண்ணீர் வந்து விட்டது எனக் கூறி ஆகஸ்ட் 14 ஆம் தேதி மணல் ரீச்சை மூடி விட்டனர். இதனால் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ்வாரத்தை இழந்தும், மாடுகளுக்கு தீவனம் கொடுக்க முடியாத நிலை உள் ளது. எனவே மணல் மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தையும், மாடுகளையும் பாது காத்திட கோரி கொள்ளிடம் ஆற்றில் கிளியநல்லூர், மாதவபெருமாள் கோவில், தாளக்குடி, கூகூர், திருவளர்சோலை ஆகிய இடங்க ளில் மணல் மாட்டு வண்டி ரீச்சை உடனே திறக்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் அந்தநல்லூர், கிழக்கு, மேற்கு ஒன்றியங்கள் சார்பில் வியாழனன்று சிந்தாமணி அண்ணாசிலை அருகில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மணல் மாட்டு வண்டி சங்க செயலாளர் சேகர் தலைமை வகித்தார். ஆர்ப் பாட்டத்தை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, சிஐடியு மாநகர் மாவட்டத் தலை வர் ராமர், செயலாளர் ரெங்கராஜன், ஆட்டோ ஊழியர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் மணிகண்டன் ஆகியோர் பேசினர். மல்லை மோகன், கருணாநிதி, கம்பை ராஜ்மோகன், கண்ணதாசன், கூட லூர் காமராஜ், முருகன், முருங்கப் பேட்டை சாதிக், சீனிவாசன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.