tamilnadu

img

மாதிரி வாக்குப் பதிவு நிகழ்ச்சி

அறந்தாங்கி, டிச.20- புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கியில் வரும் 30ஆம் தேதி உள் ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை யொட்டி அதற்கான தேர்தல் பணி கள் தீவிரமாக நடைபெற்று வரு கிறது. நூறு சதவீதம் வாக்களிப்பது குறித்தும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதி யாக அறந்தாங்கி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப் பட்டு மாதிரி வாக்குப்பதிவு நிகழ்வு நடைபெற்றது. கோட்டாட்சியர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் நூறு சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. எவ்வாறு வாக்களிப்பது குறித்து மாணவிகளுக்கு செயல் முறை விளக்கம் மூலம் ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் வாக்குப்பதிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி, வில்லுப் பாட்டு, நாடகத்தை மாணவிகள் செய்து காண்பித்தனர். நிகழ்ச்சியில் வட்டாட்சியர் சூரியபிரபு, தலைமை ஆசிரியர் கார்த்திகா, பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;