மன்னார்குடி செப் .14- மின்வாரிய பட்டயப் பொறியாளர் சங்க தென்மண்டலத் தலைவராக மன்னார்குடியை சேர்ந்த மின்வாரிய உதவி செயற்பொறியாளர் எஸ்.சம்பத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அகில இந்திய மின்வாரிய பட்டயப்பொறியாளர்கள் சம்மேளன பொதுக்குழு கூட்டம் புது தில்லி அருகேயுள்ள நொய்டாவில் அண்மையில் நடைபெற்றது. இதில் அனைத்து மாநில மின்வாரியங்களின் பட்டயப்பொறியாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அகில இந்திய மின்வாரிய பட்டயப் பொறியாளர்கள் சம்மேளனத்துக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதில் தமிழ்நாடு மின்வாரிய சங்கத்தின் திருச்சி மண்டலச் செயலர் மன்னார்குடி எஸ்.சம்பத் தென் மண்டலத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரை தமிழ்நாடு மின்பொறியாளர் சங்கத்தின் தலைவரும் அகில இந்திய துணைப்பொதுச்செயலாளருமான அ.அந்தோணி படோவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பாராட்டினர்.