புதுக்கோட்டை, நவ.17- தமிழக அரசு சாலைப் பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக் கும் நடவடிக்கையை கைவிட வேண்டு மென தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கம் வலி யுறுத்தி உள்ளது. சாலைப் பணியாளர் சங்கத்தின் ஏழாவது கோட்டப் பேரவை மாவட்டத் தலைவர் டி.முத்துக்கருப்பன் தலை மையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் ரங்கசாமி, குமார், எம்.சந்திரன், மாயழகு, சோணமுத்து, பி.சந்திரன் உள்ளிட்டோர் நிகழ்வுகளில் பங்கேற்றனர். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஜபருல்லா, செயலாளர் ஆர்.ரெங்கசாமி ஆகி யோர் வாழ்த்திப் பேசினார். சங்கத்தின் மாநில செயலாளர் மகேந்திரன் சிறப்பு ரையாற்றினார். முன்னதாக மாவட்ட துணைத் தலைவர் கருப்பையா வர வேற்றார். இணைச் செயலாளர் எஸ்.ஐயப்பன் நன்றி கூறினார். சாலைப் பணியாளர்களுக்கு தர ஊதியம் வழங்கவேண்டும். சாலைப் பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். பணிநீக்க காலத்தில் இறந்து போன சாலை பணியாளர்களின் வாரிசு களுக்கு அரசு வேலை வழங்க வேண் டும். தளவாடச் சாமான்கள் மற்றும் காலணிகள் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு சுற்றுலா செல்ல பயணப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.