tamilnadu

img

நிறுவனங்களின் பழிவாங்கும் போக்கு: தொழிலாளர்களை அரசு பாதுகாத்திடுக

பெரம்பலூர், ஜூன் 14- அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைத்தால் தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் இதனால் பல தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். சிலர் மீது வழக்குப் போட்டு பழிவாங்கி விடுகின்றனர் எனவே இதில் தமிழக அரசு தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு வியாழக்கிழமை சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட தலைவர் ஆ.சிற்றம்பலம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.அழகர்சாமி துணை செயலாளர்கள் எஸ்.அகஸ்டின் ஆர்.இராஜகுமாரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆட்டோ ஊழியர் சங்க மாநிலக்குழு சி.சண்முகம், மாவட்ட செயலாளர் எ.ரெங்கநாதன், கட்டுமான தொழிலாளர் சங்கம் எ.கணேசன், பொது தொழிலாளர் சங்கம் பி.முத்துசாமி மின் ஊழியர் மத்திய அமைப்பு எம்.பன்னீர்செ ல்வம் கலந்து கொண்டனர். 

கரூர்

இதே போல் கரூர் ஆர்.எம்.எஸ் தபால் அலுவலகம் முன்பு சிஐடியு சங்க மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு சங்க மாவட்ட தலைவர் ஜி. ஜீவானந்தம் தலைமை வகித்தார். சங்க மாவட்ட செயலாளர் சி.முருகேசன், எல்ஐசி ஊழியர் சங்க தஞ்சை கோட்ட துணை தலைவர் வி.கணேசன் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜெ.ஜெயராஜ், ரத்தினமாலா ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிஐடியு சங்க மாவட்ட நிர்வாகிகள் கா.கந்தசாமி, எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அ.காதர்பாட்சா, சி.ஆர்.ராஜா முகமது, அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் த.சகிலா, என்.சாந்தி, எம்.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.

நாகை 

நாகப்பட்டினம் அவுரித்திடலில் சி.ஐ.டி.யு.சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.செல்வராஜ் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்டத் துணைத் தலைவரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து சிறப்புரையாற்றினார். சி.ஐ.டி.யு.மாவட்டச் செயலாளர் சீனி.மணி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். தோழமைச் சங்க நிர்வாகிகள் எம்.பெரியசாமி, சொ.கிருஷ்ணமூர்த்தி, எம்.குருசாமி உரையாற்றினர்.