தூத்துக்குடி, மே 25 -தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் மே 28-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தூத்துக்குடி நகர்புறக் கோட்ட செயற் பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மே 28-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதன் காரணமாக பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.இதன்படி போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ம் ரயில்வே கேட், 2-ம் ரயில்வே கேட், மட்டக்கடை, கடற்கரை சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், தெப்பகுளம், சிவன் கோவில் தெரு, டபுள்யூ.ஜி.சி ரோடு, ஜார்ஜ் ரோடு, வி.இ.ரோடு, ஸ்டேட் பாங்க் காலனி, முத்து கிருஷ்ணாபுரம், முத்தம்மாள் காலனி, கேடிசி நகர், சிவந்தாகுளம் பிரதான சாலை, தாமோதரநகர், குறிஞ்சிநகர், சிதம்பர நகர், பிரையன்ட் நகர், சுப்பையா முதலியார்புரம் அண்ணா நகர் டூவிபுரம், ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.