tamilnadu

img

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை ரத்து செய்யக் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஜூலை 19- மத்திய அரசின் பட்ஜெட்டில் பெட் ரோல், டீசல் மீது சுமத்தப்பட்ட வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். அநியாயமாக உயர்த்தப்பட்ட இன்சூரன்ஸ் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டு நர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட ஜங்சன் பகுதிக்குழு சார்பில் மத்திய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டுனர் சங்க மாவட்ட தலை வர் சந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டுனர் சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன், பொருளாளர் அன்புசெல்வம், மாவட்ட நிர்வாகிகள் அழகப்பன், அப்பாஸ் ஆகி யோர் பேசினர். ஜங்சன் பகுதி தலை வர் அசோக் நன்றி கூறினார்.    திருவாரூர் திருவாரூரில் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஏ.நபி தலைமையேற்றார். சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முருகையன், துணைத் தலைவர் ஜி.பழனிவேல், சங்க மாவட்ட செயலாளர் எம்.கே.என்.அனிபா, மாவட்ட நிர்வாகிகள் ஏஒன்மணி, பொன்.ஆறுமுகம், ஏ.கே.செல்வம், டி.வீரமணி, எஸ்.பாக்கியராஜ் உட்பட நூற்றுக்கணக்கான ஆட்டோ தொழி லாளர்கள் கலந்து கொண்டனர். நகர செயலாளர் எம்.தியாகராஜன் நன்றி கூறினார்.