சீர்காழி ஜூலை 11- கொள்ளிடம் பகுதியில் உள்ள ஏழை தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கி அரசு திட்டத்தின் கீழ் வீடும் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த 42 ஊராட்சி களில் 200 கிராமங்கள் உள்ளன. அனை த்து கிராமங்களிலும் விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளர்களே வசித்து வருகின்ற னர். விவசாயத் தொழிலே இவர்களின் பிரதானத் தொழிலாகும். விவசா யத்தை நம்பியே நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களும் வசித்து வருகின்ற னர். விவசாயத் தொழிலாளர்களும் மாதத்திற்கு சில நாட்கள் மட்டுமே வேலை கிடைப்பதால் மிகுந்த சிர மத்துடன் தொழிலாளர்களின் குடும்பங்கள் இருந்து வருகின்றன.
கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள 200 கிராமங்களில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிலமற்று சொந்த வீட்டு மனை இல்லாதவர்களும், ஆற்றங் கரை குளக்கரை மற்றும் ஏரிக்கரை உள்ளிட்ட இடங்களில் வசித்து வரு கின்றனர். வீட்டு மனைப் பட்டா கூட இல்லாத தொழிலாளர்களுக்கு அரசின் வீடு எப்படி கிடைக்கும் என்ற ஏக்கத்தோடு தொழிலாளர்களின் குடும்பங்கள் ஓலைக்குடிசைகளில் வசித்து வரு கின்றனர். ஆனால் அரசுக்கு சொந்த மான புறம்போக்கு மற்றும் பொது இடங்கள், சில நபர்களின் கட்டுப்பாட் டில் ஆக்கிரமிப்பில் இருந்து வரு கின்றன. ஆனால் ஏழை எளிய மக்கள் சொந்தமாக மற்றும் வீடு வசதி இல்லா மல் இருந்து வருகின்றனர். இந்த ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த வர்களை யாரும் கண்டு கொள்வதே இல்லை. எனவே பாதுகாப்பற்ற முறையில் சொந்த மனை பட்டா இல்லாமல் கொள்ளிடம் பகுதியில் சிரமத்துடன் வாழ்ந்து வரும் ஏழை எளிய குடும்பத்தி னர்களுக்கு, அரசு அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஒவ்வொரு கிராம மாக பார்வையிட்டு ஆய்வு செய்து மனைப்பட்டா இல்லாதவர்களுக்கு உடனடியாக இலவச மனைப்பட்டா வழங்கி அரசு திட்டத்தின் கீழ் கான்கி ரீட் வீடு கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் காமராஜ் உள்ளிட்டோர் தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.