tamilnadu

வேலங்குடி சுடுகாட்டுக்கு பாதை அமைத்துத் தரக் கோரிக்கை

கும்பகோணம், நவ.21-   தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா திருவிடைமருதூர் ஒன்றியம் வேலங்குடி கிரா மத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தட்சிணாமூர்த்தி தலைமை ஏற்றார். கட்சி யின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செய லாளர் எஸ்.பழனிவேல், ஒன்றிய குழு உறுப்பினர் தருமையன் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், திருவிடைமருதூர் ஒன்றியத்திற் குட்பட்ட வேலங்குடி கிராமத்தில் சுமார் 50 குடும்பங்களுக்கு மேலாக ஆதிதிராவிடர்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் குடும்பங்க ளில் யாராவது இறக்க நேரிட்டால் பிரேதத்தை எடுத்துச் செல்வதற்கு சுடுகாட்டு பாதை இல்லா மல் மிகவும் சிரமமாக உள்ளது.  இது குறித்து பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வை யிட்டு சுடுகாட்டு பாதை அமைத்து தரவேண்டும். வேலங்குடி பகுதியில் குடிதண்ணீர் கலங்கிய நிலையில்  குழாயில் எப்பொழுதும் வந்து கொண்டிருக்கிறது.  சுத்தமான குடி தண்ணீர் இல்லாததால் கிராம மக்கள் நோய் வரும் அச்சத்தில் இருக்கிறார்கள். அந்த குடி நீரை சுத்திகரிப்பு செய்து தெளிவான நீர் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலங்குடி ஆதிதிராவிடர் தெருவில் மினி  டேங்க் அமைத்து பொதுமக்களுக்கு தட்டுப்பா டின்றி குடிநீர் வழங்க வேண்டும். மேலும் வேலங்குடி கிராமம் வண்டுவஞ் சேரி ஊராட்சிக்கு உட்பட்டு உள்ளதால் 100 நாள் வேலை பணித்தள பொறுப்பாளர்கள் வண்டுவஞ்சேரியிலிருந்து வருகிறார்கள். அதற்கு பதிலாக வேலங்குடி கிராமத்தில் உள்ள நபர்களையே பணித்தள பொறுப்பா ளராக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேற் கண்ட கோரிக்கைகள் குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.