நாகப்பட்டினம், ஜூன் 20- தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க 3-வது வட்ட மாநாடு அரசு ஊழியர் சங்கக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு வட்டத் தலைவர் எம்.எம்.காதர்மொகிதீன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜி.காளிமுத்து வரவேற்புரையாற்றினார். வட்டச் செய லாளர் வி.மாரிமுத்து வேலை அறிக்கை யும், பொருளாளர் என்.பாபுராஜ், நிதி நிலை அறிக்கையும் முன்வைத்தனர். சங்க மாவட்டத் தலைவர் ஆ.நட ராஜன், செயலாளர் சொ.கிருஷ்ண மூர்த்தி, பொருளாளர் பி.ஆசைத்தம்பி, துணைத்தலைவர் கே.பக்கிரிசாமி, இணைச் செயலாளர்கள் ஆர்.நட ராஜன், கே.குப்புசாமி, வேதாரணியம் வட்டத்தலைவர் ஆர்.குணசேகன், கீழ்வேளூர் வட்டத் தலைவர் என். பக்கிரிசாமி, திருக்குவளை வட்டச் செய லாளர் எஸ்.ஆர்.கலைச் செழியன் உள்ளிட்டோர் உரையாற்றினர். தோழமைச் சங்க நிர்வாகிகள் சி. கலியபெருமாள், எஸ்.கணபதி, மு. தமிழ்வாணன், வி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் ஏ.டி.அன்பழகன் சிறப்புரையாற்றி னார். நாகைத் தொழிற்சங்கக் கூட்ட மைப்பின் தலைவர் சு.சிவகுமார் நிறை வுரையாற்றினார். வட்டப் பொருளாளர் என்.பாபுராஜ் நன்றி கூறினார். இதில், புதிய ஓய்வூதியத் திட் டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூ தியத் திட்டத்தை மீண்டும் செயற்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டத் தலைவ ராக எம்.எம்.காதர்மொகிதீன், செயலா ளராக வி.மாரிமுத்து, பொருளாளராக என்.பாபுராஜ், துணைத் தலைவர் களாக ஜி.காளிமுத்து, எம்.பி.குண சேகரன், வி.பூபதி, இணைச் செய லர்களாக எம்.செல்வராஜ், எம்.ஜெய ராஜ், எஸ்.மணியன் ஆகியோர் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர்.