திருச்சிராப்பள்ளி, ஜூலை 30- திருச்சி மாநகராட்சி 31, 32வது வார்டு பகுதியில் 150 ஏக்கர் பரப்பளவில் மாவடிக்குளம் உள்ளது. இக்குளத்தில் முட்புதர்கள் மண்டி நிலத்தடி நீரை உலர செய்கின்றன. இதனால் பொன்மலை, திருநகர், தென்றல்நகர் உள்பட சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடிநீர் வற்றி கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதை கண்டித்தும். மாவடிக்குளத்தில் உள்ள முட் புதர்களை அகற்றி ஒன்றரை மீட்டர் அளவிற்கு குளத்தை தூர்வார வேண்டும். குளத்தின் கரையை மேம்படுத்தி நடை பாதை அமைத்து, சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும். 7 நீர்வரத்து வாய்க்கால்களை சீர மைக்க வேண்டும். குளத்தில் கழிவுநீர் கலப் பதை தடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொன்மலை பகுதிக்குழு தலைமையில் இயற்கை ஆர்வலர்கள் சங்கம், பொதுவுடைமை இயக்கம், ஜனநாயக அமைப்புகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செவ்வாயன்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக வந்து சுப்பிரமணிய புரத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறை யினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்மலை பகு திக்குழு செயலாளர் கார்த்திகேயன், துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மாறன், டிஆர்இயு ஒர்க் ஷாப் டிவிசன் கோட்ட தலைவர் மகேந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் முட்புதர்களை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பது. ரூ 1கோடியே 56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து குளத்தை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, நடை பாதை மற்றும் சிறுவர் பூங்கா அமைக்க 2 மாதத்திற்குள் நடவடிக்கை எடுப்பது. வரத்து வாய்க்கால்களை விரைவில் சீரமைப்பது என முடிவானது. இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்ற னர்., ஜூலை 30- திருச்சி மாநகராட்சி 31, 32வது வார்டு பகுதியில் 150 ஏக்கர் பரப்பளவில் மாவடிக்குளம் உள்ளது. இக்குளத்தில் முட்புதர்கள் மண்டி நிலத்தடி நீரை உலர செய்கின்றன. இதனால் பொன்மலை, திருநகர், தென்றல்நகர் உள்பட சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடிநீர் வற்றி கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதை கண்டித்தும். மாவடிக்குளத்தில் உள்ள முட் புதர்களை அகற்றி ஒன்றரை மீட்டர் அளவிற்கு குளத்தை தூர்வார வேண்டும். குளத்தின் கரையை மேம்படுத்தி நடை பாதை அமைத்து, சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும். 7 நீர்வரத்து வாய்க்கால்களை சீர மைக்க வேண்டும். குளத்தில் கழிவுநீர் கலப் பதை தடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொன்மலை பகுதிக்குழு தலைமையில் இயற்கை ஆர்வலர்கள் சங்கம், பொதுவுடைமை இயக்கம், ஜனநாயக அமைப்புகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செவ்வாயன்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக வந்து சுப்பிரமணிய புரத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறை யினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்மலை பகு திக்குழு செயலாளர் கார்த்திகேயன், துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மாறன், டிஆர்இயு ஒர்க் ஷாப் டிவிசன் கோட்ட தலைவர் மகேந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் முட்புதர்களை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பது. ரூ 1கோடியே 56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து குளத்தை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, நடை பாதை மற்றும் சிறுவர் பூங்கா அமைக்க 2 மாதத்திற்குள் நடவடிக்கை எடுப்பது. வரத்து வாய்க்கால்களை விரைவில் சீரமைப்பது என முடிவானது. இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்ற னர்.