கும்பகோணம் ஜூலை 7- இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருநெல்வேலி மாவட்ட பொருளாளர் தோழர் அசோக் படுகொலையைக் கண்டித்தும், தோழர் அசோக்கிற்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியம் பருத்திக்குடி கிளை வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சிரஞ்சீவி தலைமையேற்றார். வாலிபர் சங்கத்தினர் வீரவணக்கம் செலுத்திய பிறகு, சாதி ஆணவ படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாவட்டப் பொருளாளர் ராமன், குடந்தை ஒன்றியகுழு உறுப்பினர் தினேஷ் பிரகாஷ், விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.