பெரம்பலூர், நவ.17- தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியா ளர்கள் சங்க பெரம்பலூர் கோட்ட 7 வது பேரவை வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கத் தில் நடைபெற்றது. கோட்ட இணைச் செயலர் பி.முத்து வர வேற்றார். கோட்ட தலைவர் பி.சுப்ரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் எஸ்.இளங்கோவன் துவக்க வுரையாற்றினார். நிர்வாகிகள் எஸ்.ரஜினி, ராமநாயகம், கே.மணிவேல், கே.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர்கள் எஸ்.சையது யூசுப்ஜான், எஸ்.செந்தில்நாதன், எஸ்.மகேந்திரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாநிலத் தலைவர் எம்.பாலசுப்ரமணியன் நிறை வுரை ஆற்றினார். புதிய நிர்வாகிகளாக கோட்ட தலை வர் பி.சுப்ரமணியன், செயலாளர் சி.சுப்ரமணியன், பொரு ளாளர் கே.கருணாநிதி, துணைத்தலைவர்கள் பி.முத்து, டி.பழனிசாமி, இணைச்சசெயலாளர்கள் டி.ராமநாயகம், எ.ராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கோட்ட இணைச் செயலர் எ.ராஜா நன்றி கூறினார். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், பணி நீக்க காலத்தில் இறந்த சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு வாரிசுப் பணி வழங்க வேண்டும், பராமரிப்பு பணியினை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட்டு அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.