விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் முடிவு
பெரம்பலூர், மே 21-அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்பு செவ்வாயன்று துறைமங்கலத்திலுள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.மாவட்டக்குழு உறுப்பினர் ராமுவரவேற்றார். சங்க வளர்ச்சி குறித் தும் அமைப்பு ரீதியாக போராடி கோரிக்கைகளை வென்றெடுப்பது குறித்து மாநிலச் செயலாளர் எம்.சின்னத்துரையும், நூறு நாள் வேலை திட்ட அமலாக்கம், சட்டவிதிகள் மற்றும் அரசு உத்தரவுகள் குறித்து மாநிலச் செயலாளர் கே.பக்கிரிசாமியும், அரசு நலத்திட்டங் கள்- தகவல் அறியும் உரிமை சட்டவிழிப்புணர்வு குறித்து மாநிலக் குழுஉறுப்பினர் வாசுவும் கருத்துரையாற்றினர்.‘உழைப்பாளிகளின் உடல் நலன் காப்போம்’ என்ற தலைப்பில் மக்களுக்கான மருத்துவர் கழக மாநிலச் செயலாளர் டாக்டர் சி.கருணாகரன் மற்றும் ‘எதிர்கால கடமைகள்’ தலைப்பில் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் ஆகியோர் விளக்கவுரையாற்றினர். நூறு நாள் வேலை கேட்டும், வேலையில்லா கால நிவாரணம் வழங்க வேண்டும், அரசு உத்தரவின்படி தேர்தல் நாள் அன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஜூன் மாதம் 4-ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள யூனியன் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் 50 ஆயிரம் பனைவிதை மற்றும் மரக்கன்றுகளை மாவட்டம்முழுவதும் நடுவது என முடிவு செய்யப்பட்டது. குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைஎடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட துணைச் செயலாளர்எஸ்.ஜெய்சங்கர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.