tamilnadu

கடைமடைப் பகுதி குளங்களை தூர்வார கோரிக்கை

தஞ்சாவூர். மே 14-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த புனல்வாசலில் நுகர்வோர் குழு கூட்டம் தலைவர் வி.ஏ.சவரிமுத்து தலைமையில் நடைபெற்றது. செயலாளர்கள் ஆர்.ஏ.செபஸ்தியார், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், டெல்டா பாசனப் பகுதிகளில் உள்ள ஏ, குளம், குட்டை ஆகியவற்றை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி செப்பனிட்டு சுத்தம் செய்ய அரசு உரியநடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத்திற்கு கடைமடை வரை தட்டுப்பாடின்றி, தடங்கலின்றி தண்ணீர் சென்றுசேர்வதை பொதுப்பணித்துறை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆரோக்கியம் நன்றி கூறினார்.