மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு
அறந்தாங்கி, அக்.23- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி களப்பக்காடு முதல் வீதியை சேர்ந்த முரளி இவர் எலக்ட்ரானிக்ஸ் பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார் இவருடைய மனைவி உமாமகேஸ்வரி(35) வீட்டில் துணி துவைப்பதற்கு வாஷிங் மெஷினில் துணிகளை போட்டு சுவிட்ச் போட்டார் மழை யின் காரணமாக ஈரமாக இருந்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மழையினால் சேதமடைந்த கொள்ளிடம் ஆற்றங்கரை சாலை
சீர்காழி, அக்.23- மழையினால் சேதமடைந்த கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையை பலப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச்சாவடியிலி ருந்து காட்டூருக்கு செல்லும் கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு கொள்ளிடம் ஆற்றில் சென்ற வருடம் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்ட தால் பல இடங்களில் உடையும் அபாயம் ஏற்பட்டது. அப்போது தற்காலிகமாக உடைப்புகள் மரத்துண்டுகள் மணல் மூட்டைகள் போடப்பட்டு அடைக்கப்பட்டது. அளக்குடியில் ஆற்றின் கரை 100 மீட்டர் தூரத்திற்கு பெரும் உடைப்பு ஏற்பட்டு போர்க்கால அடிப்படையில் அடைக்கப் பட்டது. தற்காலிகமாக பல இடங்களில் ஏற்பட்ட உடைப்பு கள் அடைக்கப்பட்டன. ஆனால் நிரந்தரமாக கரையை பலப்படுத்தி மேம்படுத்த எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்கவில்லை. சென்ற வருடம் ஆற்றங்கரை சாலையை ஏற்பட்ட உடைப்புகள் தற்பொழுது அப்படியே உள்ளன. இந்நிலை யில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் சாதாரண மழையால் ஆற்றங்கரை தார் சாலை மண் சாலையாக மாறி சேரும் சகதியுமாக உள்ளது. இதனால் மோட்டார் பைக் மற்றும் சைக்கிளில் செல்லும் மாணவர்கள் மற்றும் விவசாயி கள் அவதியடைந்து வருகின்றனர். நடந்து செல்லும் போதும் சிலர் சாலையில் வழுக்கி கீழே விழுகின்றனர். மேலும் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிக அளவு திறந்து விடப்பட்டால் ஆற்றின் வலது கரையில் பல இடங்க ளில் உடைப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையை பலப்படுத்தி மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரையோரமுள்ள 20 க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
நவ.26 மறியலை விளக்கி பிரச்சாரம்
புதுக்கோட்டை, அக்.23- வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 26 அன்று புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள சாலைமறியல் போராட்டத்தை விளக்கி புதுக்கோட்டை யில் புதன்கிழமையன்று சத்துணவு ஊழியர்கள் பிரச்சா ரத்தில் ஈடுபட்டன. சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மானி யத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் வருகின்ற நவ.12 அன்று புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான பேரணியும், நவ.26 அன்று மாவட்ட அளவி லான சாலை மறியல் போராட்டத்தையும் சத்துணவு ஊழி யர்கள் நடத்த உள்ளனர். இந்தப் போராட்டத்தை விளக்கி புதுக்கோட்டை ஒன்றி யத்தில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் பி.சக்திவேல் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் தலைவர் ச.காம ராஜ், செயலாளர் பெ.அன்பு, ஒன்றியச் செயலாளர் க.தங்க ராஜ், மாவட்ட நிர்வாகிகள் இரா.விசாலாட்சி, துரை.அரங்க சாமி, கு.ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் பேசினர். மநிலச் செயலாளர் கு.சத்தி நிறைவுரையாற்றினார். ஒன்றியப் பொருளாளர் த.ராஜகோபால் நன்றி கூறினார்.
தெலுங்கானா போக்குவரத்து ஊழியர்கள் வேலை நீக்கத்துக்கு கண்டனம் நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம், அக்.23- தெலங்கானா மாநிலத்தில் போராட்டம் நடத்திய போக்குவரத்து ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த தெலுங்கானா மாநில அரசின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள ஊழியர்களை மீண்டும் பணியமர்த்திப் போராடும் ஊழியர் சங்கத் தலை வர்களை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளைத் தீர்த்து வைக்கவேண்டு என வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதன்கிழமைம்ம மதியம் நாகப்பட்டி னம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் து.இளவர சன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.டி. அன்பழகன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.ஜோதிமனி, நாகைத் தொழிற்சங்கக் கூட்ட மைப்புத் தலைவர் சு.சிவகுமார் ஆகியோர் உரையாற்றி னர். மாவட்டத் துணைத் தலைவர் கே.இராஜூ நன்றி கூறி னார்.
கள உதவியாளர் பணியிடங்களை நிரப்பக் கோரி ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, அக்.23- தமிழ்நாடு மின்துறை அமைச்சர் அறிவித்தபடி 2,900 ஐடிஐ கள உதவியாளர்கள் பணியிடங்களை உடனே நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் திருச்சி மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம் எண்ணூ ரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவல கம் முன் புதன் அன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் ரங்க ராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் அகஸ்டின், மாநில துணைத் தலைவர் ராஜா ராமன், திருச்சி பெருநகர் வட்டச் செயலாளர் செல்வராசு, பெரம்பலூர் வட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் நடராஜன், கரூர் வட்டச் செயலாளர் தனபால், தஞ்சாவூர் வட்டச் செயலா ளர் காணிக்கை ராஜ், திருவாரூர் வட்டச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர் கலைச்செல்வன், சிஐடியு மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினர்.