குளித்தலை, நவ.17- கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி வாய்க்கால் மேடு புதுத்தெருவில் பொதுக் கழிப்பிடம் கட்டித் தரக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் குளித்தலை ஒன்றி யம் சார்பாக நவ.19 அன்று குளித்தலை நகராட்சி அலுவல கத்தில் மலம் கழிக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதை யடுத்து 16-ம் தேதி மாலை குளித்தலை வட்டாட்சியர் தலைமை யில் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. பேச்சுவார்த்தையில், குளித்தல் நகராட்சிக்குட்பட்ட 7, 9 வார்டு வாய்க்கால்மேடு புதுக்கோட்டை தெருவில் வசிக்கும் ஊர் பொதுமக்கள் வெளிப்புறங்களில் மலம் கழித்து வரு வதாகவும் மழைக்காலமாக இருப்பதால் பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பொதுக் கழிப்பிடம் கட்டித் தர வேண்டும் என இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியினர் தெரிவித்தனர்.
இதில் பொதுக்கழிப்பிடம் அமைப்பது தொடர்பாக நகராட்சி ஆணையர் தலைமையில் ஒரு வார காலத்தில் தளர்வை செய்து கழிப்பிடம் அமைக்க நடவடிக்கை எடுப்ப தாகவும் கழிப்பிடம் கட்டுவதற்கு தேவையான அவசியப் ரோபோக்கள் இடம் கிடைக்காத பட்சத்தில் குறைந்த பட்சம் இரண்டு நடமாடும் கழிப்பறைகள் இரு மாத காலத்திற்குள் அமைத்துத் தருவது எனவும், அதுவரை தற்காலிக ஏற்பாடாக புதுக்கோட்டை தெரு வார்டு எண் 9 பயணியர் விடுதி எதிர்புறம் உள்ள பெண்கள் பொதுக் கழிப்பிடத்தை வாய்க்கால்மேடு புதுக்கோட்டை பெண்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்திக் கொள்ள நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்த தன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது. இக்கூட் டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் முத்து செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.