tamilnadu

img

அடாவடி கட்டண வசூல்: சுங்கச்சாவடி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஜன.20- கரூர் மாவட்டம், மண வாசி டோல்கேட்டில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பாலபாரதி யிடம் வாக்குவாதம் செய்து அடாவடி கட்டண வசூலில் ஈடுபட்ட டோல்கேட் நிர்வா கத்தை கண்டித்து மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கும்பகோணம் காந்தி பார்க் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கும்ப கோணம் சிபிஎம் நகர செய லாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை. பாண்டி யன், குடந்தை ஒன்றிய செயலாளர் ஜேசுதாஸ், திரு விடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சா. ஜீவ பாரதி, மாவட்ட குழு உறுப்பி னர் பக்கிரிசாமி, ஓய்வூதியர்  சங்க மாவட்ட செயலாளர் ராஜகோபாலன், வட்ட செய லாளர் பக்கிரிசாமி, மாதர் சங்க பொறுப்பாளர் அறிவு ராணி வாசுதேவன் அயூப் கான் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொறுப் பாளர்கள் சாதிக்பாட்சா ராஜ் முகம்மது, ரஹ்மத்துல்லாஹ், குடந்தை ஜாபர் மக்கள் அதி காரம் ஜெயபாண்டியன் மக்கள் ஜனநாயக கட்சி நசீர் அலி காங்கிரஸ் கட்சி பொறுப் பாளர்  ஐயப்பன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.  ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் கட்சியினர், ஓய்வூதியர் சங்கம் சிஐடியு மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

;