அறந்தாங்கி, பிப்.28- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா பெருநாவலூரில் உள்ள அரசுக் கலை மற்றும் அறிவி யல் கல்லூரியில் 46 கெளரவ விரிவுரை யாளர்கள், அலுவலக பணியாளர்கள் என 60க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இக்கல்லூரியானது அறந்தாங்கி தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் 2010ம் ஆண்டு பாரதி தாசன் பல்கலைகழக, கலை மற்றும் அறிவியல் மாதிரிக் கல்லூரியாக செயல்பட்டு வந்த நிலையில் பெருநாவலூரில் புதிதாக கல்லூரிக் கட்டப்பட்டு அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்டது. இதில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கௌரவ விரிவுரையாளர்கள் அலுவலக பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அண்ணா மலை பல்கலைக்கழகத்திலிருந்து மிகைப் பேராசிரியர்களை இக்கல்லூ ரிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காலமுறை ஊதியத்திற்கு நிகரான அனைத்து பணிகளையும் இக்கல்லூரிக்காக உழைத்து கல்லூரியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல உறு துணையாக செயல்பட்ட தங்களுக்கு பணி நிரந்தரம் வேண்டும் என்று கூறி கெளரவ விரிவுரையாளர்கள் அலுவலக பணியாளர்கள் கல்லூரி வாயில் முன்பு இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.