தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், திருவோணம் நவினா மேல்நிலைப் பள்ளியில், இந்தியாவின் ‘அரசியலமைப்பு சட்ட நாள்’ நடைபெற்றது. பாரத் கல்விக் குழும செய லர் புனிதா கணேசன் வழிகாட்டுதல்படி தலைமை கல்வி அலுவலர் பேராசிரியர் வேத கரம்சந்த் காந்தி தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் சுகுமாறன் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் பாலமுருகன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் பிரவீன் ஆகியோர் கலந்து கொண்டனர். வழக்கறிஞர் பாலமுருகன், “இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட விதம், அதன் சிறப்புகள் மற்றும் அதனை பின்பற்ற வேண்டியதன் அவசியம்” குறித்து எடுத்துரைத்தார். விழாவின் நிறைவில் அரசியலமைப்பு சட்ட தினத்தை நினைவு கூறும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. முன்னதாக மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் கவிதா வரவேற்றார். பாரத் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கலைச்செல்வி நன்றி கூறினார்.