tamilnadu

img

காவல் அதிகாரி வில்சன் கொலையில் தேடப்பட்ட 2 பேர் கைது

பெங்களூரு,ஜன.14-  களியக்காவிளை காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த அப்துல் சமீம், தவுபிக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தமிழக-கேரள எல்லையில் குமரி மாவட்டம் களியக்காவிளை சந்தை ரோட்டில் உள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்த களியக்காவிளை காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் வில்சன்  ஜனவரி 8 அன்று 2 பேரால்  சுட்டுக்கொல்லப்பட்டார்.  காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய குமரி மாவட்டம்  திருவிதாங்கோடு, நாகர்கோ வில் இளங்கடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அப்துல் சமீம் (32), தவுபிக் (28) ஆகிய 2 பேர்தான் இந்த கொலையை செய்ததாக தெரிய வந்தது. இவர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.  இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பியில் ரயில் நிலையம் அருகே குற்றவாளிகள் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரையும் அந்த மாநில காவல்துறையினரால் செவ்வாயன்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் 2 பேரும் விரைவில் தமிழகம் கொண்டு வரப்படுகிறார்கள்.

;