tamilnadu

img

பள்ளி மாணவர்களின் இசை அரங்கேற்ற நிகழ்ச்சி

தரங்கம்பாடி, மே 31-நாகை மாவட்டம் தரங்கம்பாடி பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப்பள்ளியில் கோடைக்கால இசைப்பயிற்சி மே 1 முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றது. குறைந்த கட்டணத்தில் வயலின், ஜெர்மன் புல்லாங்குழல், கிடார் ஆகிய இசைக் கருவிகளை மயிலாடுதுறை, தரங்கம்பாடி, காரைக்கால், பொறையார் உள்ளிட்டா பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் கற்று வந்தனர். சென்னையைச் சேர்ந்த ஜோபு சந்திரன் என்ற இசை ஆசிரியர் மூலம் பயிற்சி பெற்ற மாணவர்களின் இசை அரங்கேற்றம் நிகழ்ச்சி வியானன்று மாலை தரங்கம்பாடி சி.எஸ்.ஐ ஆலயத்தில் நடைபெற்றது.தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபையின் 12-ம் பேராயர் எட்வின் ஜெயக்குமார், புதிய எருசலேம் ஆலய ஆயர் நவராஜ் ஆபிரகாம், காரைக்கால் ஆலய ஆயர் சாம்சன் மோசஸ், பிஷப் ஜான்சன் பள்ளி தலைமையாசிரியர் ஜான்சைமன், தாளாளர் ஸ்டான்லி கில்பர்ட், எருசலேம் ஆலய நிர்வாகிகள் ஜெயகரன், துரைசாமி, கிளமண்ட் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.