tamilnadu

img

நேதாஜி உருவச் சிலை திறப்பு விழா

கரூர், ஜன.23- கரூரில், மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் புதுப்பிக்கப்பட்ட உருவச் சிலை திறப்பு விழா மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாரிசுகள் சங்கத்தின் சார்பில் கரூர் ஆசாத் ரோட்டில் நடை பெற்றது. சங்கத்தின் தலைவர் கு.அவினாசிலிங்கம் தலைமை வகித்தார். அகில இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் சமிதி தலைவர் என்.ஆர்.மத்தாடு சுபாஷ் சந்திரபோஸ் சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர், தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். ஆட்சியர் த.அன்பழகன், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே. கந்தசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.ரத்தினம், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சுப்பிரமணி யன், சங்க ஆலோசகர் காமராஜ் பேசினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சங்க அமைப்பு செயலாளர் சேகர் நன்றி கூறி னார்.

;